சன நெரிசல் மிக்க ரயிலின்
மிதிபலகையில் பயணித்த ஒருவர் இன்று ப(10) பிற்பகல் பெம்முல்லே ரயில் நிலையத்துக்கருகில் ரயிலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
கடும் நெரிசலுக்கு மத்தியில் பாதுகாப்பற்ற வகையில் ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவரே இவ்வாறு ரயிலிலிருந்து தவறி கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
கோட்டையிலிருந்து பொல்காவலை நோக்கிச் சென்ற ரயிலில் இருந்து விழுந்தே இவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.