நடன வகுப்புக்குச் சென்ற சிறுமிகளை
பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் நடன வகுப்பு ஆசிரியர் ஒருவர் இன்று (13) கைது செய்யப்பட்டதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
ஹங்வெல்ல படேவெல பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய திருமணமான நடன வகுப்பு ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் சிறுமிகளை தனது நடன வகுப்புக்கு அழைத்துச் சென்று அவர்களின் பாலியல் உறுப்புகளை பிடித்துக் கொண்டு வாட்ஸ்அப் மூலம் ஆபாச புகைப்படங்களைப் பிடித்து துஷ்பிரயோகம் செய்தது தெரிய
வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் தொடர்பில் தலங்கம மற்றும் நவகமுவ பொலிஸாருக்கும் இவ்வாறான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஹங்வெல்ல காவற்துறையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.