1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மிஹிந்தலை வைத்தியசாலையினால்

பாடசாலை மாணவர்கள் குழுவொன்றுக்கு ஏற்றப்பட்ட ஊசி மருந்து காரணமாக 11 பாடசாலை மாணவர்கள் சுகயீனமடைந்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மிஹிந்தலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் 6 வயதுக்கும் 13 வயதுக்கும் இடைப்பட்ட 11 பாடசாலை மாணவர்களே இவ்வாறு தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டதையடுத்து கடும் சுகவீனமடைந்துள்ளனர்.
 
இந்த மாணவர்கள் மிஹிந்தலை வைத்தியசாலைக்கு செப்சிஸ் ( septicemia) நோய்க்கு சிகிச்சை பெறச் சென்றபோது, ​​அங்கு வழங்கப்பட்ட தடுப்பூசி காரணமாக சுகவீனமடைந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
 
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மாணவர்கள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
 
சம்பவம் தொடர்பில் வடமத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி