மத்தேகொடையில் உள்ள சிறுவர்
பராமரிப்பு நிலையத்தில் தங்கியிருந்த 6 சிறுமிகள் (14) நேற்றிரவு அங்கிருருந்து தப்பிச் சென்றுள்ளதாக மத்தேகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தப்பிச் சென்ற சிறுமிகளில் 15 வயதுடைய மூவர், 16 வயதுடைய இருவர் மற்றும் 18 வயதுடைய ஒருவர் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் மத்தேகொட பொலிஸார் இவர்களைக் கண்டுபிடிக்க விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.