பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு
கடுமையான வேலைத்திட்டம் ஒன்றை அமுல்படுத்த வேண்டும் என அமைச்சர்கள் குழுவொன்று ஜனாதிபதியிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
அத்துகிரிய நகரில் பிரபல வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா என்ற கிளப் வசந்த என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
பாதாள உலகத்தை இவ்வாறு ஆட அனுமதித்தால் நாட்டில் அமைதியை எவ்வாறு பேணுவது என அவர்கள் ஜனாதிபதியிடம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.