மழையுடன் கூடிய காலநிலையுடன்
வீசிய பலத்த காற்றினால் கல்கிஸ்ஸை பிரதேச ஹோட்டல் ஒன்றின் பின்பகுதி மேற்கூரையின் ஒரு பகுதி கழன்று ரயில் பாதையில் வீழ்ந்துள்ளது.
இதன் காரணமாக ஒரு வழித்தடத்தில் மாத்திரம் நீண்ட தூர ரயில்களை இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில் பாதையில் காணப்படும் மேற்கூரை அகற்றப்படும் வரை வெள்ளவத்தையில் இருந்து கொழும்பு வரை இரு பாதைகளிலும் ரயில்களை இயக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ரயில்வே திணைக்கள் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ரயில் பாதையில் விழுந்து கிடக்கும் மேற்கூரையை விரைவாக அகற்றுவதற்காக ரயில்வே ஊழியர்கள் அந்த இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.