தலங்கம கொஸ்வத்த பகுதியில் இரண்டு தனியார் பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்தவர்களில் விபத்தை ஏற்படுத்திய பஸ் ஒன்றின் சாரதியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மீகொடவில் இருந்து புறக்கோட்டை மற்றும் கடுவெல - கொள்ளுப்பிட்டி வரை இயங்கும் பஸ்களே இவ்வாறு மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.