ஜனாதிபதி தேர்தலை இடைநிறுத்தக் கோரி
தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்படாமல் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, அர்ஜுன ஒபேசேகர மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் இந்த மனு பரிசீலிக்கப்படடது.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் உரிய முறையில் நிறைவேற்றப்படாததன் காரணமாக, அதனை சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தி அங்கீகரிக்கும் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது அரசியலமைப்பை மீறும் செயலாகும் எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி சட்டத்தரணி அருண லக்சிறி உனவடுனவால் கடந்த வெள்ளிக்கிழமை இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.