கண்டி மத்திய சந்தைக்கு முன்பாக
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொள்ளச் சென்ற ஆதரவாளர்கள் பயணித்த இ.போ.ச பஸ் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இரவு 7.00 மணியளவில் பேராதனை விடுதிக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் கல் வீசி தாக்கியதில் கம்பளை டிப்போவுக்குச் சொந்தமான பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி உடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி பேராதனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் தோட்டத் தொழிலாளர்கள் குழுவொன்று பஸ்ஸில் பயணித்துள்ளதுடன் அவர்களில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.