கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு
முன்பாக உள்ள வீதிக்கு அருகில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று (15) இரவு கோட்டை பொலிஸாருக்குக. கிடைத்த தகவலின் அடிப்படையில் இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர் யார் என்பது இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், உயிரிழந்தவர் 60 முதல் 65 வயதுடைய ஒல்லியான உடலும் 05 அடி 04 அங்குல உயரமும் கொண்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவர் கடைசியாக சட்டை மற்றும் சிவப்பு நிற சேலை அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, அயகம, அரபொறுவ பிரதேசத்தில் தலையில் காயங்களுடன் அயகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
அயகம, உஸ்வத்த, அரபொருவ பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.