1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

எச்.எம்.எம்.பர்ஸான்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு
உட்பட்ட ஓட்டமாவடி - 2 ஆம் வட்டாரம் ஜீ.எஸ்.வீதியைச் சேர்ந்த நபரொருவர் கம்போடியா நாட்டில் மரணமடைந்துள்ளார்.
 
தொழில் நிமித்தம் சுமார் ஒரு வருடத்துக்கு  முன்னர் இலங்கையிலிருந்து சென்ற இவர் வியாழக்கிழமை (11) மரணமடைந்துள்ளார்.
 
தனது அறையிலிருந்த நிலையில் குறித்த நபர் மரணமடைந்த தகவல் கம்போடியா நாட்டிலிருந்து தமக்கு கிடைத்ததாக மரணமடைந்த நபரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
 
இவ்வாறு மரணமடைந்த நபர் கலேவெல பகுதியைச் சேர்ந்தவரும் ஓட்டமாவடி பகுதியில் திருமணம் முடித்து வசித்து வந்தவருமான இரண்டு பிள்ளைகளின் தந்தையான 55 வயதுடைய மௌலவி எம்.எம்.அயூப்கான் என்பவராவார்.
 
ஜனாஸாவை கம்போடியா நாட்டில் நல்லடக்கம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குடும்பத்தினர் மேலும் தெரிவித்தனர்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி