ஜனாதிபதி தேர்தல் திகதி இம்மாத
இறுதிக்கு முன்னர் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 16ஆம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்வது அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 16 முதல் 21 நாட்களுக்குள் செய்யப்பட வேண்டும்.
வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாளிலிருந்து 4 வாரங்கள் முதல் 6 வாரங்கள் வரை ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்” என்றார்