நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத்
பதியுதீனுக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் கடந்த வாரம் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது .
இந்தச் சந்திப்பின்போது இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ரிஷாத்திடம் உங்கள் ஆதரவு எந்த வேட்பாளருக்குக் கிடைக்கும் என கேட்டபோது,
இதற்குப் பதிலளித்த ரிஷாத் பதியுதீன் இது தொடர்பான தீர்மானம் ஏற்கனவே கட்சியினால் எடுக்கப்பட்டு ஜனாதிபதி தேர்தலில் சஜித்துக்கு ஆதரவளிக்க கட்சி தீர்மானித்துள்ளதனை சுட்டிக்காட்டினார் என நாமும் செய்தி வெளியிட்டுள்ளோம்.
இந்தச் செய்தி தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரான ரிஷாத் பதியுதீன் தமிழ் லீடருக்கு தெரிவிக்கையில்,
' எமது கட்சி சஜிதுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாக நான் இந்திய உயர்ஸ்தானிகரிடம் கூறவில்லை. யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் எமது அரசியல் உயர்பீடம் கூடியே தீர்மானிக்கும் என்றுதான் அவரிடம் தெரிவித்தேன்' என ரிஷாத் பதியுதீன் விளக்கமளித்தார்.