அத்துருகிரியில் அண்மையில் துப்பாக்கிச்
சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த பிரபல வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா அல்லது கிளப் வசந்தவின் மனைவி தற்போது களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவரது மார்புப் பகுதியில் அறுவைச் சிகிச்சை செய்து தோட்டாக்களை அகற்றும் பணியில் மருத்துவர்கள் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், அவர் தொடர்ந்து களுபோவில வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதுடன் இதுவரை 3 சத்திர சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதேவேளை, அண்மையில் இனந்தெரியாத நபரோ அல்லது குழுவினரோ கிளப் வசந்தவின் மனைவிக்கு மலர் வலயம் ஒன்றை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, வைத்தியசாலையைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கிளப் வசந்தவின் இறுதிக்கிரியைகள் வசந்தவின் மனைவி பங்கேற்க வேண்டுமென அவரது பிள்ளைகள் எதிர்பார்த்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், அவர் ஆபத்தான நிலையில் இருந்ததால் அது தோல்வியடைந்தது.