அம்பலாங்கொடை கந்த மாவத்தை
பகுதியில் இன்று (16) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
19 வயதுக்கு உட்பட்ட தேசிய கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்த அம்பலாங்கொட கந்த மாவத்தையைச் சேர்ந்த தம்மிக்க நிரோஷன என்ற 40 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
அவர் வீட்டில் இருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த தசுன் மானவடுவின் சகா எனவும் அவர் துபாய்க்கு தப்பிச் சென்றவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.