பௌத்த மதத்தை அவமதிக்கும்
வகையில் இரண்டு புத்தர் சிலைகள் மற்றும் தெய்வப்படங்களுடன் கூடிய பல புகைப்படங்களை தரையில் உடைத்து, அந்தப் படங்களை சமூக ஊடகங்களில் டிக் டொக்கில் பரப்பியதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவரை அம்பன்பொல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் அம்பன்பொல சமகி மாவத்தையைச் சேர்ந்தவர் எனவும், பொலிஸார் இளைஞனின் தந்தையிடம் வாக்குமூலம் பெற்ற போது, தனது மகன் இரண்டு மாதங்களாக ஏதோ நோயினால் அவதிப்பட்டு வந்ததாகவும் தெரிவித்தார்.
புத்தர் சிலைக்கு மேலதிகமாக தெய்வம் மற்றும் சித்த சூனிய தெய்வம் போன்றவற்றின் சிலைகளும் தரையில் அடித்து நொறுக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.