மலல்சிறிபுர, பன்லியத்த பிரதேசத்தில்
இரண்டு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பஸ்ஸும் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸின் சாரதி என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்சிறிபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்