'எல் போர்ட்'அரசியல் கட்சிகளுக்கு
எதிர்காலத்தில் ஒரு நாள் நாட்டை ஆள வாய்ப்பு வழங்க முடியும். ஆனால் தற்போது ஆட்சியை அனுபவமும் முதிர்ச்சியும் கொண்ட ரணில் விக்கிரமசிங்கவுக்கே வழங்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் உண்மையையே பேசும் கட்சி.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று (17) நடைபெற்ற ஐக்கிய லக்வனிதா முன்னணியின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வஜிர அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.