1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கொலைகள் மற்றும் பாரிய

குற்றங்களைச் செய்த பாதாள உலகத் தலைவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சிக்கும் நபர்களைத் தேடி வருகிறோம். 

இதுவே இந்த பாதாள உலக குண்டர்களின் கடைசி நிகழ்ச்சி நிரலாக அமையும்.
 
அப்பாவி மனித உயிர்களுடன் விளையாடும் இந்த பாதாள உலக குண்டர்களுக்கு பொலிஸாரால் பதில் அளிக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
 
கிளப் வசந்தவின் படுகொலையுடன் நாட்டில் எழுத்துள்ள பாதாள உலக பயங்கரவாதம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவிய போதே பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
 
மேலும் கருத்து தெரிவித்த பொலிஸ் மா அதிபர் கூறியதாவது:
 
ஒருவரையொருவர் கொல்ல பாதாள உலகக் குழுக்களுக்கு இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. இதுதான் இவர்களின் முடிவு. 
 
இந்த நாட்டை விட்டு வேறு நாடுகளுக்குச் சென்றுள்ள பாதாள உலகக் குற்றவாளிகள் மக்களுக்கு அழைப்பு விடுத்து அச்சுறுத்தி வருகின்றனர். 
 
பல்வேறு குற்றங்களைச் செய்வோரை  நான் அனுமதிக்க மாட்டேன். இது நிறுத்தப்பட வேண்டும். நாட்டு மக்கள் அச்சமோ சந்தேகமோ இன்றி வீதியில் நடமாடும் சூழலை உருவாக்க வேண்டும் என்றார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி