கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களின் வசதிக்காக புதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது
அதன்படி, கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கு, www.immigration.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக முன் பதிவு செய்யப்பட வேண்டும் .
ஒன்லைனில் பதிவு செய்ததன் பின்னர் முன்னுரிமை முறையின்படி கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான புதிய முறை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.