எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக
2023 ஆம் ஆண்டு 03 ஆம் இலக்க தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் அதிகாரங்களைப் பிரயோகிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ எழுத்துமூல அறிவித்தலை வழங்கியுள்ளார்.
பாராளுமன்றத் தேர்தலின்போது சட்டவிரோதமான செயல்கள், இலஞ்சம், கப்பம் பெறுதல் போன்ற சம்பவங்களுக்கு தற்போதைய விகிதாசார தேர்தல் முறையின் கீழ் சட்டம் செயலிழந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, சட்டத்தின் ஆட்சி மாற்றப்பட்டு சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட்ட ஜனநாயகத்துக்காக தேர்தல் ஆணைக்குழுவின் பூரண ஆதரவுடன் 2023 ஆம் ஆண்டு 03 ஆம் இலக்க தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதன் காரணமாக எதிர்வரும் தேர்தலுக்கு சட்டத்தை அமுல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுப்பதாக அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்க்ஷ தெரிவித்தார்.