அடுத்த ஜனாதிபதித் தேர்தலில்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எம்முடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராகவிருந்தால் அவருக்கு பொதுஜன பெரமுன பூரண ஆதரவளிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
இப்போது தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வேலைத்திட்டம் எங்களிடம் உள்ளது. நாங்கள் வெற்றி பெறுவோம் என்பது மகிழ்ச்சியான செய்தி.
ரணில் விக்கிரமசிங்க எம்முடன் இணைந்து பயணிக்க தயாராக இருந்தால் நாங்கள் அவருக்கு பூரண ஆதரவளிப்போம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
மொட்டுக் கட்சியின் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.