பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
டிரான் அலஸின் கூற்றுப்படி, கடந்த வருடம் டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் இற்றை வரை 19 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
யுக்திய நடவடிக்கையின் வெற்றி தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சின் விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் இன்று (17) கலந்து கொண்ட போதே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 17ஆம் திகதி முதல் இதுவரை 955 ஆயுதங்களும் 42 கைக்குண்டுகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.