தம்மிக்க நிரோஷனை கொலை
செய்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (16) அம்பலாங்கொடையில் உள்ள அவரது வீட்டுக்கு முன்பாக ஜோன்டி என அழைக்கப்படும் தம்மிக்க நிரோஷன சுட்டுக் கொல்லப்பட்டார்.
சிசிரிவி கெமராவின் காட்சிகளின்படி இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்ள மூவர் வந்திருப்பது தெரிய வந்துள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
தம்மிக்க நிரோஷன் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவராவார்.