பாதாள உலகக் குழு உறுப்பினர்
பியும் ஹஸ்திகா என்றழைக்கப்படும் “பியுமா”வை எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் இன்று (18) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரபல பாதாள உலக புள்ளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்ஷிகா குணரத்ன என்றழைக்கப்படும் “குடு சலிந்து”வின் முக்கிய சகாவான “பியுமா” என்ற பியும் ஹஸ்திகா இவ்வருடம் பெப்ரவரி மாதம்15 ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரபபட்டார்.
அதனைத் தொடர்ந்து சந்தேக நபரை விசாரிப்பதற்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.