கொழும்பு - இரத்தினபுரி பிரதான
வீதியில் குருவிட்ட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புஸ்ஸல்லா பகுதியில் இன்று (19) கார் ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சாரதி உறங்கியதால் வீதியோரம் இருந்த கல் குவியலில் கார் மோதி வீதியின் குறுக்கே தலைகீழாக புரண்டது.
குருணாகல் பகுதியில் இருந்து குருவிட்ட, எடண்டாவல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் கலந்து கொள்ள இந்தக் காரில் தம்பதியர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் காரில் பயணித்த இருவர் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் விபத்தில் காயம் ஏதும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.