கடந்த வாரத்தில் அதிகம் பேசப்பட்ட
தலைப்புகளில் ஒன்று "கிளப் வசந்த் கொலைச் சம்பவம்".
அப்படி அவர் மறைந்தாலும் அந்தச் சம்பவத்தைப் பற்றி நாம் கேட்கும், பார்க்கும் செய்திகளும் அப்படியேதான் உள்ளன.
இதற்கிடையில், அவரது குடும்ப உறுப்பினர்கள் உயிரிழந்த கிளப் வசந்த அல்லது சுரேந்திர வசந்த பெரேராவின் நினைவாக சில தொண்டுகளைச் செய்திருந்தனர்.
அதன்படி அவரது இளைய மகன் வெளிநாட்டில் இருந்து ஏழு நாட்கள் அன்னதானம் வழங்கியுள்ளார்.
“அவரது இளைய மகன் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து வெளிநாட்டில் உள்ள ஒரு விஹாரை ஒன்றில் ஏழு நாட்கள் அன்னதானம் வழங்கியுள்ளார்.
குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அனுதாப செய்திகளை அனுப்பிய அனைவரின் அன்பையும் ஆதரவையும் வெளிப்படுத்தியதற்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
மேலும், சுரேந்திர வசந்தவின் குடும்ப உறுப்பினர்களும் துன்பகரமான காலப்
பகுதியில் தமக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
“எங்கள் அன்புக்குரிய தந்தையின் இழப்பால் நாங்கள் வருத்தமடைகிறோம், இந்த கடினமான நேரத்தில் எங்களுக்கு உதவிய உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள் மற்றும் அனைவருக்கும் மிகவும் நன்றி.
எங்கள் அன்பான தந்தையின் இறுதிச் சடங்கில் நீங்கள் கலந்து கொண்டதையும் தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் எங்களுக்கு அனுப்பப்பட்ட அனைத்து இரங்கல் செய்திகளையும் நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம்.
உங்களின் கருணைக்காகவும், எங்களுடைய துயரத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்காகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.