1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தனது இரண்டரை வயது குழந்தையை

கைவிட்டு  காதலனுடன் பிரதேசத்திலிருந்து  வெளியேறிய பெண்ணையும்  காதலனையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கணவன் மற்றும் தனது குழந்தையுடன் வசித்து வந்த குடும்ப பெண் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது காதலுடன் ஊரை விட்டு சென்றிருந்தார். 
 
இது தொடர்பில் கணவனால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் பெண்ணையும்  அவரது காதலனான இளைஞனையும் கைது செய்தனர். 
 
கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து  இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில்  வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி