புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பொலிஸாரால் இன்று ( 20)கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு அண்மையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் இன்று கல்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு சட்டத்தரணி ஒருவருடன் வந்தபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அலி சப்ரி ரஹீம் இன்று (20) நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.