இலங்கையைச் சேர்ந்த சுமார்
50 மாணவர்கள் பங்களாதேஷின் பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது, பங்களாதேஷ் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டு, அந்நாட்டின் பல நகரங்களில் பல நாட்களாக நடைபெற்று வரும் மாணவர் போராட்டங்கள் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு நிலையில் பங்களாதேஷில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்கள் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு, அந்நாட்டு அதிகாரிகள் பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறுமாறு இதுவரை அறிவிக்காததால், வெளிநாட்டு பல்கலைக்கழக மாணவர்கள் விடுதிகளில் தங்கி இருப்பதாக பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட மாட்டார்கள் எனவும், அந்நாட்டில் உள்ள இலங்கை மாணவர்கள் தற்போது டாக்கா மற்றும் சிட்டகொங்கில் உள்ள பல்கலைக்கழக விடுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது