அத்துருகிரியவில் கடந்த 8ஆம்
திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கிளப் வசந்தவின் மனைவி மெனிக் விஜேவர்தன தற்போது பொது வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதுருகிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள பச்சை குத்தும் நிலையமொன்றை திறப்பதற்கு சென்றிருந்த போது கிளப் வசந்தவை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது.
அங்கு அவரும் மற்றொரு நபரும் உயிரிழந்தனர். மேலும், கிளப் வசந்தவின் மனைவியும், பிரபல பாடகியுமான கே.சுஜீவா உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
கிளப் வசந்தவின் மனைவி வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மூன்று சத்திர சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அங்கு, அவரது மார்பில் இருந்த தோட்டாக்களை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.