எதிர்வரும் செப்டம்பர் 28ஆம் திகதி
சனிக்கிழமை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதாக மிகவும் நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஆரம்ப உத்தியோகபூர்வ அறிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழு அடுத்த வாரத்தில் வெளியிடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதுள்ள சட்ட நிலவரப்படி செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16 வரை ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலின்போது ஏதேனும் ஊழல் அல்லது சட்ட மீறல்கள் காரணமாக சில வாக்களிப்பு நிலையங்களின் தேர்தலை இரத்துச் செய்ய நேர்ந்தால், அந்த வாக்களிப்பு நிலையங்களில் மீண்டும் தேர்தலை நடத்துவதற்கு சுமார் பதினைந்து நாட்கள் ஆகலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டரீதியாக கூறப்படாவிட்டாலும், ஜனாதிபதித் தேர்தல் பாரம்பரியமாக சனிக்கிழமையன்று நடைபெறுவதால், ஒக்டோபர் 2ஆம் திகதிக்கு முதலாக வரும் எதிர்வரும் சனிக்கிழமை அதாவது செப்டெம்பர் 28ஆம் திகதி நடைபெறும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.