போதைப்பொருள் கடத்தலுக்கு
தலைமை தாங்கிய சந்தேகத்தில் கஞ்சிபான இம்ரானின் சகா ஒருவர் உட்பட மூவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பெண் ஒருவரும் அடங்குவார்.
ராகம, வெலிசர மற்றும் வெல்லம்பிட்டிய பிரதேசங்களில் வசிக்கும் 24 மற்றும் 28 வயதுடைய பெண் ஒருவரும், இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரனுமான கஞ்சிபான இம்ரானின் போதைப்பொருள் கடத்தலை இந்நாட்டில் வழிநடத்தியதாக கூறப்படும் ஒருவரும் இவர்களில் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.