கேகாலை பிரதேசத்தில் கடந்த
16 ஆம் திகதி இனந்தெரியாத குழுவொன்று, கடந்தகால அரகலய போராட்டத்தில் ஈடுபட்டி கயான் பிரதீப் நந்தசேன மற்றும் அவரது மனைவியை இலக்கு வைத்து அசிட் வீச்சு தாக்குதல் நடத்தியமை தொடர்பில் கேகாலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அசிட் வீச்சில் கயான் பிரதீப் நந்தசேனவுக்கோ அல்லது அவரது மனைவிக்கோ காயம் ஏற்படவில்லை எனினும் அவர்கள் பயணித்த காருக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
ஜூலை 9, 2022 அன்று இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர், அதன் செயற்பாட்டாளர்களில் ஒருவரான கயான் பிரதீப் நந்தசேனா இனந்தெரியாத குழுவினரால் கடத்தப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்டார்.
மக்கள் போராட்ட நாளன்றும் கயான் பிரதீப் பிரதமர் இல்லத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.