1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நுவரெலியா பிரதேசத்தில் தொழிலை

ஆரம்பித்த கிளப் வசந்த அல்லது சுரேந்திர வசந்த பெரேரா கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதான சந்தேக நபர்கள் இருவரும் மிகக் குறுகிய காலத்தில் கைது செய்யப்படுவார்கள் எனவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அமைச்சர் மேலும் கூறியதாவது:
 
“போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒழித்து, நாட்டின் இளைஞர்களை பாதுகாப்பதும் நல்ல இளைஞர் சமூகத்தை உருவாக்குவதும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. 
 
தற்போது அதை வெற்றிகரமாக செய்து வருகிறோம். ஒவ்வொரு நாளும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகின. ஆனால் இப்போது இல்லை. 
 
அரசியல்வாதிகள் பொதுமக்களை ஏமாற்றி பணக்காரர் ஆகின்றனர். ஒரு கட்சியாக நாங்கள் அதை ஒருபோதும் செய்ய மாட்டோம். பொதுமக்களுக்கு நல்லது செய்வதே எங்கள் கட்சியின் அடிப்படை நோக்கம். 
 
ஊழலற்ற, வேலை செய்யக் கூடிய ஒருவராக இருந்தால் மட்டுமே யாருடன் இணைந்து பணியாற்றுவது என்பதை நானும், எங்கள் கட்சியும் முடிவு செய்கிறோம். பொதுமக்கள் எங்களுடன் இணையுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி