மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை
விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இன்று (22) உத்தரவிட்டுள்ளார்.
ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 50,000 ரூபா ரொக்கம் மற்றும் தலா ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் பிணை வழங்கப்பட்டுள்ளதுடன் அவரது வெளிநாட்டுப் பயணத்தையும் தடை செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
தெமட்டகொட பிரதேசத்தில் இளைஞரை கடத்திச் சென்று தடுத்து வைத்தமை மற்றும் தாக்கியமை உள்ளிட்ட 18 குற்றச்சாட்டுக்களில் அவர் குற்றவாளியாக காணப்பட்டுள்ளார்.