பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மரணம் குறித்த செய்தி சமீபத்தில் சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போல் பரவியது
அரசாங்க உளவுத்துறையின் விசாரணையில் இது அரசாங்கத்திற்குள் ஒரு குழுவால் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கை என்று தெரியவந்துள்ளது.
இந்த நோக்கத்திற்காக 4 தொலைபேசி எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், வெளிநாடுகளில் உள்ள ஒரு குழுவினரின் உதவியும் இதற்கு பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், உளவுத்துறை தலைவர்கள் இந்த அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க பயப்படுவதாக தெறியவருகின்றது.
இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுபவர்கள் அரசாங்கத்திலுள்ள உயர் அரசியல்வாதியின் ஆதரவாளர்கள் என்று தெறியவருகின்றது.