இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாணப் பிராந்திய முகாமையாளராக செல்லத்ததுரை குணபாலசெல்வம் என்பவரை டக்ளஸ்தேவாணந்தா நியமித்திருந்தார்.
இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய முகாமையாளர் வெற்றிடத்தை நிவர்த்தி செய்துகொடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அணிதிரண்டு வந்து நன்றி தெரிவித்த ஊழியர்கள் என்று, டக்ளஸ் கட்சி உறுப்பினர் ஒருவர் முக புத்தகத்தில் பதிவேற்றி இருந்தார்.
ஆனல் கதை வேறு மாதிரி செல்கிறது. டக்ளஸ் தேவானந்தா தனது ஆட்களில் ஒருவரை முகாமையாளராக நியமித்தது தொடர்பாக அங்கஜன் கடும் அதிருப்த்தி அடைந்துள்ளதோடு. இந்த நியமனத்தை தான் எப்படி என்றாலும் ரத்து செய்வேன் என்று போர் கொடி தூக்கி உள்ள நிலையில்.
இன்றைய தினம்(திங்கள்) டக்ளஸ் நியமனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வடக்கு மாகாணத்தில் பேரூந்து சேவைகள் பணிப்புறக்கணிப்பு செய்யபட்டுள்ளதாகவும் சற்று முன் தகவல்கள் வெளியாகியுள்ளன.