கொவிட் வைரஸ் தொற்று காரணமாக கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்கை பெற்று வந்த மருத்துவர் கயான் தன்தநாராயண சுவாசப் பைகள் செயலிழந்த நிலையில் இன்று (2) காலை காலமானார். இலகையில் கொரோனா தொற்று காரணமாக மரணித்த முதலாவது மருத்துவர் இவராவார்.
நுகேகொட லைசியம் பாடசாலையில் கல்வி கற்ற இவர் சீனாவின் டியென்ஜின் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ பட்டம் பெற்றவராவார். ராகம போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய நிலையியே கொரோனா தொற்றுக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இவரது தந்தையும் ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது குடும்பத்தினரும் நோய் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.