கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்,மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரும், ஊடகவியலாளருமான செ.நிலாந்தனுக்கு பொலிசார் தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை சிவில் சமூக அமைப்புகள் பல்சமய ஒன்றியங்கள் அரசியல் கட்சிகள் இணைந்து நடாத்தப்படும் அகிம்சை வழி போராட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு கிழக்கு மாகாணம் பூராக பொலிசார் நீதிமன்ற தடை உத்தரவை பெற்றுவருகின்றனர்.
அந்த வகையில் மக்களின் போராட்டங்கள் தொடர்பான செய்திகள், வீடியோக்களை பதிவு செய்து ஊடகங்கள் மற்றும் முகநூலில் பிரசுரித்துவரும் ஊடகவியலாளர் நிலாந்தனுக்கு அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பொறுப்பதிகாரி அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் தடை உத்தரவை பெற்றுள்ளனர்.
இதனால் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை நடைபெற உள்ள அகிம்சை வழியில் முன்னெடுக்க உள்ள மக்கள் போராட்ட செய்திகளை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.