இது தொடர்பாக நியமிக்கப்பட்ட நிபுணர்களின் குழுவின் ஆலோசனையின் பேரில் கொவிட் தொற்றால் மரணிக்கும் உடல்களை அடக்கம் செய்வது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என சுகாதார இராஜங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புல்லே தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக சுகாதார இராஜங்க அமைச்சர் இந்த பதிலை தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றால் மரணித்த உடல்களை அடக்கம் செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு எப்போது வெளியிடப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இது தொடர்பான இறுதி முடிவு சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவால் எடுக்கப்படும் என்று கூறினார்.
கொவிட் தொற்று நோயால் மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (10) நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
பிரதமருக்கு சர்வதேசம் பாராட்டு:
கொவிட் தொற்றால் மரணிக்கும் உடல்களை அடக்கம் செய்ய அனுமதித்ததற்காக இலங்கை பிரதமரை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உடனடியாக பாராட்டியுள்ளார்.
இதற்கிடையில், இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலெய்னா பி. டேப்லெட்டிஸ் அரசது ட்விட்டர் செய்தியில் பிரதமரின் முடிவைப் பாராட்டுவதாகவும், சர்வதேச சுகாதாரக் கொள்கையை இலங்கை பின்பற்றுவதையும், மத உரிமைகளை மதித்து வருவதையும் ஒரு சாதகமான நடவடிக்கையாக கருதுவதாக தெரிவித்துள்ளார்.
பதியுதீன் நன்றி:
இதற்கிடையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நா.உ. ரிஷாத் பதியுதீன் நேற்று அவரது ட்விட்டர் செய்தியில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கிய பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார்.
பிரதமரின் அறிக்கை விரைவில் செயல்படுத்தப்படும் என்று நம்பிய அவர், இது தொடர்பாக அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.