முன்னர் 'வெற்றிலை' சின்னத்தின் கீழ் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் அரசாங்கத்தின் தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து விவாதிக்க தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 12 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அமைச்சர் விமல் வீரவன்சவின் இல்லத்தில் நேற்று (11 வியாழக்கிழமை) மாலை சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.
இச்சந்திப்பில் அரசாங்கத்தின் முக்கிய அரசியல் கட்சியான சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியைத் தவிர அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த முறையில் இணைந்த அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளில், வெற்றிலை' அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாண்மையான கட்சிகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
கட்சியை அரசியல் ரீதியாக வலுப்படுத்த ஜனாதிபதியும் பிரதமரும் எடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கூறுகையில், கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று பசிலின் கட்சியால் தங்கள் கட்சி தலைமைக்கு கடுமையாக அழுத்தம் கொடுத்ததாக தெரிவித்துள்ளனர்.
கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் உதய கம்மன்பில, 2015 முதல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் அரசாங்கம் ஆட்சிக்கு வரும் வரை நடைபெற்றது என்று குறிப்பிட்டார்.
சமீப காலங்களில் கட்சி தலைமைக் கூட்டத்தை நடத்த இயலாமை காரணமாக, நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து விவாதிக்க 12 கட்சிகள் சந்திக்க முடிவு செய்துள்ளதாக உதய கம்மன்பில கூறினார்.
விமல் மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் குறித்து அமைச்சர் உதய கம்மன்பிலவும் தனது வெறுப்பை வெளிப்படுத்தினார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் முறையான நம்பிக்கையுள்ள விசாரணையின் சமிக்ஞை அல்ல, மாறாக குற்றச்சாட்டுகள் குறித்த முறைதவறிய நம்பிக்கையற்ற விசாரணையின் சமிக்ஞையாகும் என தெரிவித்தார்.