சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தி, வடக்கில் பாரிய மக்கள் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
அதற்கமைவாக எதிர்வரும் 1ஆம் திகதி திங்கட்கிழமை காலை 8 மணிக்கு, குறித்த போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்பாக ஆரம்பமாகும்.
பின்னர், அங்கிருந்து பேரணி முன்னெடுக்கப்பட்டு, பழைய வைத்தியசாலையை சென்றடையும்
இம்மாபெரும் போராட்டத்துக்கு, மத குருக்கள்,பொது அமைப்புகள், வர்த்தக சங்கங்கள், சமூக அமைப்புக்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பல்கலைக்கழக மாணவர்கள், உள்ளிட்ட அனைத்து உறவுகளையும் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.