பெரும்பான்மை சிங்கள பௌத்த வாக்குகளால் ஜனாபதியானவர் கோட்டபாய ராஜபக்ஷ ஆனால் அவர் மீண்டும் சிங்கள பௌத்த வாக்குகளால் ஜனாதிபதியாக முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாக, அடுத்த தேர்தலில் முஸ்லிம் வாக்குகள் தேவை என்று நினைப்பவர்கள் அரசாங்கத்தில் உள்ளனர், அதன்படி சில நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகத் தெரிகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
வார இறுதி செய்தித்தாளுக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் ஆதரவு அவசியம் என்பதை மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ இப்போது தனது கட்சி ஆதரவாளர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.