இலங்கை – காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவின் புதுச்சேரி காரைக்கால் வரை பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை புதுடில்லியில் இன்று (01) கைச்சாத்திடப்பட்டுள்ளது.
“சாகர்மாலா”அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திலீப் குமார் குப்தா மற்றும் இந்த்ஶ்ரீ பயணிகள் கப்பல் சேவை சார்பில் C. நிரஞ்சன் நந்தகோபன் ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.