இம்முறை அவர்கள் அரசாங்கத்தை உடைக்கும் வரை காத்திருக்க மாட்டோம் அதற்கு முன் அவர்களை அடித்து துரத்துவோம் என சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ கூறியதாக ராஜபக்ஷ குடும்பத்தின் நெருங்கிய உறவினர் உதயங்க வீரதுங்க கூறிய கருத்து விமல்-பசில் மோதலுக்கு பதிலளிக்கும் விதமாக இருந்தது.
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இலங்கையின் ரஷ்ய தூதராக நியமிக்கப்பட்ட உதயங்க வீரதுங்க அவரது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.
இது நாங்கள் கடுமையாக உழைத்த உருவாக்கிய அரசாங்கம், நான் ஒரு விஷயத்தைச் கூறுகிறேன். இந்த நேரத்தில் யாராவது இந்த அரசாங்கத்தை உடைத்து அழிக்க நினைத்தால், நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம்.
பசில் ராஜபக்ஷ.
சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர்