ஐ.எஸ் தலைவர் மற்றும் புலம்பெயர் தமிழ் தலைவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் ரகசிய கலந்துரையாடல் நடத்தியுள்ளதாக மார்ச் 03 பாகியங்கல ஆனந்த சாகர தேரர் முன்வைத்த குற்றச்சாட்டை அடிப்டையாகக் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் இன்று (05) சி.ஐ.டி.க்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் ஊடகப் பிரிவுடன் தொடர்புடைய அதிகாரியை தொடர்புகொண்ட போது பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் முன்வைத்த குற்றச்சாட்டினை அடிப்படையாகக் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் வாக்குமூலம் அளிப்பதற்காக சி.ஐ.டி.க்கு சென்றுள்ளார்.
ஜெனீவாவில் உள்ள இலங்கை தூதரகம் ஏற்பாடு செய்திருந்த வணிகக் கூட்டத்தின் போது, சுவிட்சர்லாந்தில் வசிக்கும் இரண்டு இலங்கை தொழிலதிபர்களுடன் சுவிட்சர்லாந்திற்கு விஜயம் செய்தபோது, இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது.
வணிகக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கடந்த காலங்களில் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. எனவே, புகைப்படத்தை மறைக்க எந்த ரகசியமும் நோக்கமும் இல்லை என்று அந்த அதிகாரி கூறினார்.
எனவே, குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை விரைவில் நடத்தப்பட வேண்டும் என்றும், உண்மையான நீதி கிடைக்க வேண்டும் என்றும் , எந்தவொரு விசாரணையும் இன்றி, பாஹியங்கல சேர்ந்த ஆனந்த சாகர தேரர் சிஐடியிடம் புகார் அளிக்க முடிவு செய்துள்ளனர்.