மட்டக்களப்பு—கல்முனை பிரதான வீதியில் ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் பிரதேசத்தில் பெரும் எண்ணிக்கையிலான வெளிநாட்டு பறவைகள் வருகை தந்துள்ளன.
குறித்த பறவைகள் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளிலிருந்து வருகை தருவதாக தெரியவருகிறது. ஓவ்வொரு ஆண்டும் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் அங்கிருந்து வரும் இப்பறவைகள் இப்பிரதேச மரங்களில் தங்கி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்து தமது குஞ்சுகளுடன் மீண்டும் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் சென்று விடுவதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பிரதேசங்கள் பறவைகளின் ஓசையினால் அருமையான சூழுலுடன் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.