இலங்கையின் நில சீர்திருத்த ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் அனுராதபுரத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதை கண்டித்து 04 ம் திகதி யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக நடந்த போராட்டத்தில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தடுத்ததால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக வடக்கில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்குள் நுழைய முயன்றபோது இந்த பரபரப்பான சூழ்நிலை, ஏற்பட்டதாகவும் காவல்துறையினர் அவரைக் கண்டித்ததாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட ஒரு குழு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்குள் நுழைவதற்கான முயற்சியைத் தடுப்பதற்காக கூடுதலான படையினரை காவல்துறையினர் நிறுத்தி வைத்ததாக அறியக்கிடைக்கின்றது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக சுமார் இரண்டு மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,இறுதியில் யாழ்ப்பாண அரசாங்க அதிபரிடம் மனு ஒன்றை ஒப்படைத்துவிட்டு திரும்பினர்.