குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபருமான, பொலிஸ் ஊடக பேச்சாளரும் அஜித் ரோஹண தெரிவித்தார்.
குறித்த பிரிவின் பணிப்பாளராக இருந்த நிஷாந்த சொய்ஸா கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையிலேயே அந்த வெற்றிடத்திற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.